Tuesday, February 8, 2011

யாரேனும் மல்லிகை வைத்து
அருகே நிற்கையில்
உனது கழுத்தின் தீயிலும்
என் கைகளின் தீயிலும்
எரிய ஆரம்பித்து
நம் கத கதப்பில் கருகி முடிந்து
பழுப்பாய் கிடந்த மல்லிகையின்
வாசத்தோடே உனக்கே உனக்கான
உன் வாசமும் நிகழ்ந்த
அறையின் வாசம்

Wednesday, February 2, 2011

எட்டாம் வகுப்பு கணக்கு சார்
வராத பாட வேளை அறை
நேரம் போல வருவது இல்லை
எட்டி சுகம் பறித்து மயக்கங்கள் பருகும்
அறையின் கண் கிடக்கும் நேரங்கள்