Monday, July 8, 2013

மழைக்காலம்

மழைக்கால
இளங்காலையில்
தலைக்கு
குளித்து எதிர்ப்படும் பெண்
குதித்து நடக்கும் குற்றாலம்
இடம் பெயரும் இமயமலை
கூந்தல் வாசமோ
மழை பெய்த
அசோகவனம்.

மழைக்கால
இளங்காலையில்
பள்ளி சிற்றூர்தியின்
முன் இருக்கையில்
அமர்ந்து தூங்கும்
சீருடைச் சிறுமியின்
தூக்கம்
ஒரு அழகிய ஓவியம்
போன்றதொரு  தியானம்.