மழைக்கால
இளங்காலையில்
தலைக்கு
குளித்து எதிர்ப்படும் பெண்
குதித்து நடக்கும் குற்றாலம்
இடம் பெயரும் இமயமலை
கூந்தல் வாசமோ
மழை பெய்த
அசோகவனம்.
மழைக்கால
இளங்காலையில்
பள்ளி சிற்றூர்தியின்
முன் இருக்கையில்
அமர்ந்து தூங்கும்
சீருடைச் சிறுமியின்
தூக்கம்
ஒரு அழகிய ஓவியம்
போன்றதொரு தியானம்.